Saturday, July 17, 2010

காதலா? சாதலா?

விட்டுவிடவா? பற்றிக்கொள்ளவா?
எனும் போது
தேர்ந்தெடுத்தேன் பற்றுதலை...
துண்டிக்கவா? தொடரவா?
எனும் போது 
தேர்ந்தெடுக்கிறேன் தொடர்தலை.. 
ஏற்றுக் கொள்ளவா? ஒதுக்கிவிடவா?
எனும் போது
தேர்ந்தெடுத்தேன் ஏற்றுக் கொள்ளுதலை..
காதலா? சாதலா?  எனும் போது
தேர்ந்தெடுக்கும் உரிமை 
உன்னிடம் தரப்படுகிறது ...
தேர்ந்தெடு எதுவாயினும்
தயாராகிறேன் எதற்கும்..
ஒருவேளை மரணத்தை 
பரிசளித்தால் உயிர்த்தெழவும்..  

No comments: