Tuesday, July 20, 2010

உன் அன்பினில்

மழையில் நனைந்ததுண்டு
தேகம் சிலிர்க்க
நதியில் நனைந்ததுண்டு
வேகம் துளிர்க்க
அருவியில் நனைந்ததுண்டு
ஐம்புலன் விறைக்க
கடலில் நனைந்ததுண்டு
என் முழுமை தகிக்க
என் உயிர் சிலிர்த்து, துடித்து
துளிர்த்து, மிதந்து, விறைத்து,
தகித்து, சுகித்து, கரைந்தது
உன் அன்பினில்
நனைந்த போது.

No comments: