Tuesday, July 20, 2010

காதலால் நிரப்பி!

உனக்குத் துணிவிருக்கலாம்
மறைத்து
வைத்திருப்பதில் பயனென்ன?

உனக்கு காதலிருக்கலாம்
மௌனம்
சாதிப்பதில் நிகழ்வதென்ன?

உனக்கு இசைவிருக்கலாம்
பிடிவாதத்தால்
ஆகக் கூடியதொன்றுமில்லை..

உனக்கு புரிந்திருக்கலாம்
முரண்டு பிடிப்பதில்
முன்னேற்றம் இருக்கப் போவதில்லை..

உனக்குப் போராடப் பிடித்திருந்தால்
வந்துவிடு
இந்த வாழ்க்கை அழகானது என்பதை
அறியத் தருகிறேன்..
உன்னைக் காதலால் நிரப்பி!

No comments: