Thursday, August 26, 2010

பேசி விடு

மிக நெருக்கமானவர்களுக்கு
ஒரு நாளில்
ஒருமுறையேனும்
பேசி விடுங்கள்
நேரமின்மை
நினைவின்மை
வேலைப்பளு
தொழில்நுட்பக் காரணங்கள்
இவையாவுமிருப்பினும்
ஒரு நாளில்
ஒருமுறையேனும்
எப்படியாவது பேசி விடுங்கள்
அது இருவரில்
ஒருவருக்கு
கடைசி தருணமாக இருக்கலாம்.

1 comment:

சு.சிவக்குமார். said...

கொஞ்சம் திடுக்கிட வைக்கிறது இந்தக் கவிதை..நிச்சயம் அந்த மாதிரியான சம்யங்களில் தான் இது உங்களுக்குத் தோன்றியிருக்குமென்று நினைக்கிறேன்..ஏனெனில் கவிதை இயல்பாக வந்திருக்கிறது......