Tuesday, March 30, 2010

நடைபாதை


பெரும் இரைச்சலுடன்
கடந்து போகும் வாகனப் பொதிகளுக்கு
மத்தியில்
கண்ணீருடன் பயணப்படுமென் 
விழிகளை யாரும் 
கண்டு கொள்ள இயலாதுதான்.. 

சொட்டு சொட்டாய் வீழும் கண்ணீரைத் 
தொட்டுத் தொட்டு உலர வைக்கும்
காற்றுக்கு மட்டும் 
என் கண்ணீருக்கான இரகசியம் தெரியும்.. 

யாரிடமும் சொல்லத் தெரியாத 
காரணத்தால் 
காற்றை மட்டும் அனுமதித்திருக்கிறேன்..
என் கண்களுக்கும், கனவுகளுக்குமான
நடைபாதைகளில்..

No comments: