Tuesday, March 16, 2010

கடற்கரையில் உலவும் காதல்


மாதா கோவிலில் இருக்கும்
உன்னை நினைத்தபடி
வெள்ளிக்கிழமை பூஜையில் நான்

பூஜையில் இருக்கும்
என்னை நினைத்தபடி
மாதா கோவிலில் நீ

இரு தெய்வங்களும்
நம்மைப் பற்றி பேசியபடி
உலவுகின்றன
கடற்கரை மணல் வெளியில்

No comments: