Monday, March 15, 2010

தனிமையின் நிழலில்

தற்கொலை செய்து கொள்ள
அதீத தைரியம்
தேவைப்படுகிறது..

ஒரு நொடி மாற்றத்தைக்
கைப்பற்றிக் கொள்ளும்
அவசரம் தற்கொலைக்கு
முக்கியமானது..

அந்த நிமிடத்தைக்
கடந்து விட்டால்
அது செயலிழந்து போகவும் கூடும்..

தற்கொலைக்கு
ஒற்றை சிறிய காரணம் கூட
போதுமானதாயிருக்கிறது..

தான்தோன்றியாய் அலையும்
தற்கொலைக்கு
தனிமைவாதிகளை மிகவும்
பிடித்துப் போகிறது..

அங்கங்கே
இளைப்பாறும்
தற்கொலை
பதுங்கியிருக்கிறது
தனிமையின் நிழலில்..