Showing posts with label முரண். Show all posts
Showing posts with label முரண். Show all posts

Saturday, May 15, 2010

முரண்களும், உடன்களும்


முரண்களைத் தீர்த்துவிடுவதால்
யாது பயனுமில்லை..
உடன்பாடுகள் மட்டுமே
உறவுக்கானதல்ல..
முரண்களும் கூடத்தான்..
முரணை அழித்துவிடுவதால்
அதன் சமன் பாதிக்கப்படும்
சேர்ந்தே இருக்கட்டும்
முரண்களும், உடன்களும்
என்னையும் உன்னையும் போல்..

Thursday, December 31, 2009

பாறை மனது

அலை மோதி உடையா பாறை..
மழை தூரி கரையா மண்..
காற்று தொட்டு மறையும் நுரை..
கனல் பட்டு உருகும் மெழுகு..
யாவையும் முரணாக மாறும்..
உன் பார்வைப்பொறி
பட்டுவிட்டால்..
என் பாறை மனது
பஞ்சென பற்றியது போல..