Showing posts with label கோபம். Show all posts
Showing posts with label கோபம். Show all posts

Friday, February 17, 2012

கேள்வி


சில கேள்விகளுக்கு
பதில் சொல்வதற்காக
சில சமயம்
சிலரிடம்
பேச வேண்டியிருக்கிறது
அந்த கேள்வி
முக்கியத்துவமானதில்லை
என்றபோதும்
சில சமயம் அந்த நபரும்... 

குறுஞ்செய்தி


உனது குறுஞ்செய்தியை
கண்டும் காணாமல்
இருக்கப் பழகும்
முயற்சியில்
தோல்வியடைகிறேன்

சத்தமிட்டோ
அதிர்வெழுப்பியோ வரும்
உனது குறுஞ்செய்திகள்
என்னிடமிருந்து புதிதாய்
எதைப் பதிலாக பெறப்போகிறது?

அதனாலே
எனது மெளனத்தை
அணிவிக்கிறேன்
எனதலைபேசிக்கும்..

சலனமற்றிருக்கும் எனதுடல்



மார்பு வலியில் விம்முகிறது
தொண்டை அடைக்கிறது
வயிற்றில் அமிலம் சுரப்பது
அப்படியே தெரிகிறது
கைகள் உதறல் எடுக்கிறது
மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது
வாந்தியோ, குமட்டலோ வருகிறது

நேசத்திற்குரியவர்களின்
அதி கோபத்தில்
வார்த்தைகளால்
அறையப்படும்போது
மேற்சொன்னவையெல்லாம்
தானாகவே நடக்கின்றன..
ஒருநாள் கூட்டைவிட்டு
பறந்துவிடவும் கூடும்
காற்றெனப்படும் உயிர். .

அப்போது வீசப்படும்
வார்த்தைகள் குறித்து
வலியோ, நடுக்கமோ, உதறலோ இன்றி
சலனமற்றிருக்கும் எனதுடல்..

வெற்றிடத்தின் கடைசிப் புள்ளி


அந்த கணம் அப்படியே
நெஞ்சில் ஆழ உறைந்துவிட்டது

கேள்விகளும்
எதிர்கேள்விகளுமாய்
கடந்து போன நிமிடத்தின்
பதற்றங்கள் இன்னும் தணியவில்லை

சிரித்துப் பேசியபடியோ
கொஞ்சிப் பேசியபடியோ
நெருங்கும்போது
முந்தைய கோபக்கங்குகளின்
அனலை உணர்கிறேன்

இருவருக்குமிடையில்
விழத் துவங்கியிருக்கும்
வெற்றிடத்தை
எதைக் கொண்டு நிரப்புவதென
சிந்திக்கிறேன்..

உனது கேள்விகளை
உனது கோபங்களை
எந்தவித கவசமுமின்றி
எதிர்கொள்வதென
இப்போதைக்கு
உத்தேசித்துள்ளேன்..

வெற்றிடத்தின்
கடைசிப் புள்ளி மறையும்போது
நாம் மேற்கொண்டு பேசலாம்
ஒரு நண்பனைப் போல் நீயும்
ஒரு தோழியைப் போல் நானும்

ஒரு புன்னகையின் பின்னால்



சமாதானத்தை
முன்னெடுப்பதில்
இருவருமே சளைத்தவர்களில்லை

இம்முறை
சமாதானம் தேவையா?
என்கிற கேள்வி தொக்கி நிற்கிறது

ஒவ்வொருமுறையும்
என்னால் சமாதானத்திற்கு
முன்வைக்கிற புன்னகை குறித்து
அலட்சியம் வெளிப்படுகிறது உன்னிடம்

இம்முறை சமாதானத்துடன்
நெருங்குகிறாய்..
இனியெப்போது வேண்டுமானாலும்
எந்தபக்கமிருந்தும்
ஆபத்து நிகழக் கூடுமெனும்
எச்சரிக்கையுடன் ஏற்றுக்கொள்கிறேன்
ஒரு புன்னகையின் பின்னால்
வடிந்துகொண்டிருக்கும் கண்ணீரின் கணத்துடன்.