Showing posts with label கனவு. Show all posts
Showing posts with label கனவு. Show all posts

Tuesday, May 25, 2010

ஆயிரமாயிரம்


உனது 
ஒற்றைப் பார்வையில்
ஆயிரமாயிரம் வார்த்தைகளையும்

உனது 
ஒற்றை ஸ்பரிசத்தில்
ஆயிரமாயிரம் கனவுகளையும்

உனது 
ஒற்றைக் குறுஞ்செய்தியில் 
ஆயிரமாயிரம் எண்ணங்களையும் 
விரியச் செய்தாய்..

எனது 
ஆயிரமாயிரம் பாடல்களும்
ஆயிரமாயிரம் கவிதைகளும் 
உன்னிடம் 
ஒரு துளி காதலைக் கூடவா 
விதைக்காமலிருக்கும்..? 

Saturday, May 15, 2010

அழிவுறா எழுத்து


சிதைவுற்ற பொழுதுகளை
சீராக்கியும்
மங்கிப் போன கனவுகளுக்கு 
ஒளியேற்றியும்
வெறிச்சோடியிருந்தயென் பூமியில் 
விதையூன்றியும்
மேகங்களைத் திரட்டி
மழைபொழிந்தும்
பசுமை நிறைத்த உன் நேசத்திற்கு
எதைக் கொடுத்து ஈடாக்குவேன்?
அழிவுறா எழுத்துக்களில்
உன்னை வாழவைப்பதை தவிர..