
காதுக்குள் இசை வழிந்திருக்க
கண்களில் கனவுகள் கசிந்திருக்க
நிகழ்காலத்தில் வருங்காலம் வடிந்திருக்க
மெல்ல இருள் முடிந்து விடிந்திருக்க
அக்கணத்தில் உன் வருகை நிகழ்ந்தது
அனைத்தையும் துடைத்துவிட்டு
அடைக்கலமாகிறேன் உன் வெப்பத்திற்குள்
இருளை இழுத்துப் போர்த்தியபடி..