Showing posts with label உண்மை. Show all posts
Showing posts with label உண்மை. Show all posts

Tuesday, May 25, 2010

உன் நிழலின் அடியொற்றி


உன்னைப் போல் 
எனக்குள் யாரும் வரப் போவதில்லை..
நீ தந்த இன்பத்தையும்
துன்பத்தையும் தரப் போவதில்லை..
பின் தொடர்கிறேன் 
உன் நிழலின் அடியொற்றி
ஒருநாள்
நிஜம் காண்பேனென.. 

வார்த்தைகள்


உன்னை அழைக்கும் போதெல்லாம்
‘இப்போதுதான் நினைத்தேன்’
என்று சொல்லும் 
வார்த்தைகளை
ரசிக்கிறேன்
உண்மையில்லாத போதிலும்..
ஏனெனில் அடிக்கடி 
சொல்லும் வார்த்தைகள்
உண்மையாகிவிடக் கூடுமாம்.. 

Saturday, May 15, 2010

வலி


இந்த வலி 
பரிச்சயமானதல்ல..
முன்பின் கண்டறியாத
அதன் செய்கைகள்
ஒரு செயலையும் செய்யவிடாமல்
பசியுறக்கம் மறக்கச் செய்து
கட்டுண்டு கிடக்கச் செய்கிறது
கட்டற்றும் அலைய வைக்கிறது..
பிறர் சொல்லியும் புரியாத 
இந்த வலியை
அனுபவிப்பதில் 
அனுகூலமுமுண்டு..
வலியின் அறிமுகம் ஒருவேளை
உண்மையை பறைசாற்றலாம்..